Skip to content
Home » தமிழகத்தில் 1847 காவலர்கள் இடமாற்றம்…

தமிழகத்தில் 1847 காவலர்கள் இடமாற்றம்…

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெறும் நிலையில் நீண்ட ஆண்டுகளாக ஒரே மாவட்டத்தில் பணிபுரியும்  அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரை இடமாற்றம் செய்ய இந்திய தேர்தல் ஆணையம் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.  இதன் காரணமாக 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே மாவட்டத்தில் பணிபுரியும் காவலர்கள் தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தமிழகம் முழுவதும்  1847 காவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தலைமை காவலர்கள், முதுநிலை காவலர்கள், இரண்டாம் நிலை காவலர்கள், பெண் காவலர்கள் என மொத்தம் 1847 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் இருந்து மட்டும் 340 காவலர்கள் பிற மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!