தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரம் மீன் மார்க்கெட் சந்து, பகுதியில் வசித்து வரும் பாலன் என்பவரது மனைவி
சரண்யா(35) நேற்று இரவு அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டி தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இவருக்கும் முன்பு மதுரையைச் சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவருக்கும் திருமணம் ஆகி 15 வயதில் சாமுவேல் என்ற மகனும், 13 வயதில் சரவணன் என்ற மகனுடன் மதுரையில் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 2021-ல் சண்முகசுந்தரம் என்பவர் இறந்துவிட்ட நிலையில், சரண்யா பட்டுக்கோட்டை தாலுகா, கழுகபுலி காடு கிராமத்தைச் சேர்ந்த பாலன்(45) என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு குடும்பத்துடன் உதயசூரியத்தில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இருவரும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். பாலனுக்கும் ஏற்கனவே மனைவி உள்ள நிலையில், சரண்யாவை 2ம் திருமணம் செய்து கொண்டார்.
பாலனும், சரண்யாவும் உதயசூரியபுரம் கடைத்தெருவில் அய்யனார் டிராவல்ஸ் மற்றும் சரண்யா ஜெராக்ஸ் நடத்தி வந்துள்ளனர். நேற்று இரவு பாலன் மற்றும் சரண்யாவின் மகன்கள் ஆகியோர் கடையை பூட்டிவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று உள்ளனர்.
சரண்யா கடையை பூட்டி விட்டு கடையிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது சரண்யா வீட்டிற்கு செல்லும் சந்து பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களால் கழுத்து மற்றும் தலையின் பின்பக்கம் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். கொலைகாரர்கள் , சரண்யாவின் தலையை துண்டித்து தனியாக எடுத்த வீசி உள்ளனர். கொலைக்கான காரணம் குறித்து வாட்டாத்திகோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர். சரண்யாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
தலைதுணித்து கொலை செய்யப்பட்ட சரண்யா பாஜக பிரமுகர். இவர் மதுரை மத்திய தொகுதி பாஜகவில் பொறுப்பாளராக இருந்து உள்ளார்.
சொத்து தகராறில் இந்த கொலை நடந்திருக்கலாம் என கூறப்படுகிறநது. கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கிறார்கள்.