Skip to content

தஞ்சை விவசாயிகள் ரயில் மறியல்

நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் கொண்டு வரவேண்டும். விவசாயிகள் பெற்ற கடன் முழுமையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உட்பட  பல கோரிக்கைகளை வலியுறுத்தி  டில்லியில் விவசாயிகள் போராடி வருகிறார்கள்.

டில்லி விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும்,  அதே கோரிக்கைகளை வலியுறுத்தியும்  தஞ்சையில் இன்று சம்யுக்த கிசான் மோர்ச்சா  என்ற அரசியல் சார்பற்ற விவசாயிகள் அமைப்பு சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடந்தது.

தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் திருச்சி காரைக்கால் டெமோ ரயிலை விவசாயிகள் மறித்து போராட்டம் நடத்தினர்.

போராட்டத்திற்கு தமிழக காவிரிவிவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமை வகித்தார். தஞ்சாவூர் மண்டல தலைவர் துரை.பாஸ்கரன், காவிரி இரண்டாவது விவசாயிகள் சங்கத் தலைவர் ஏ கே ஆர் ரவிச்சந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்சியில் இருந்து காரைக்கால் சென்ற டெமோ ரயிலை மறித்து விவசாயிகள்  கோஷங்கள் எழுப்பினர்.

இதில் சுமார் 50க்கும் அதிகமான விவசாயிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 55 விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!