Skip to content

பத்திரிகை புகைப்பட கலைஞர் காலமானார்- இ தமிழ் நியூஸ் இரங்கல்

தினமணி  பத்திரிகையின் தஞ்சாவூர் புகைப்படக் கலைஞர்  எஸ். தேனாரமுதன் ,  உடல் நலக்குறைவு காரணமாக அவரது இல்லத்தில் இன்று  அதிகாலை காலமானார். அவரது உடலுக்கு  பத்திரிகயைாளர்கள் அஞ்சலி செலுத்தினர்.

இவருக்கு மனைவி கிருஷ்ணவேணி, மகன்கள் திலீபன், சண்முக பாண்டியன் உள்ளிட்டோர் உள்ளனர்.

இவரது இறுதிச் சடங்கு இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணியளவில் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை கணேஷ் நகரில் உள்ள  அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளது.தொடர்புக்கு: 8056628323.

தேனாரமுதன் மறைவுக்கு  இ -தமிழ் நியூஸ் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.

error: Content is protected !!