தினமணி பத்திரிகையின் தஞ்சாவூர் புகைப்படக் கலைஞர் எஸ். தேனாரமுதன் , உடல் நலக்குறைவு காரணமாக அவரது இல்லத்தில் இன்று அதிகாலை காலமானார். அவரது உடலுக்கு பத்திரிகயைாளர்கள் அஞ்சலி செலுத்தினர்.
இவருக்கு மனைவி கிருஷ்ணவேணி, மகன்கள் திலீபன், சண்முக பாண்டியன் உள்ளிட்டோர் உள்ளனர்.
இவரது இறுதிச் சடங்கு இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணியளவில் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை கணேஷ் நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளது.தொடர்புக்கு: 8056628323.
தேனாரமுதன் மறைவுக்கு இ -தமிழ் நியூஸ் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.