Skip to content

தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்- முதல்வர் ஸ்டாலின் பேச்சு

  • by Authour

தஞ்சை மத்திய மாவட்ட திமுக  செயலாளர்  துரை சந்திரசேகரன்  எம்.எல்.ஏ.வின்   சகோதரர் பாண்டியன்  மகள்  தனுஸ்ரீ,  வீரவிஜயன் திருமணம் இன்று  தஞ்சை மகாராஜா திருமண மண்டபத்தில் நடந்தது. இதில்  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு  திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி பேசினார்.  அவர் பேசியதாவது:

மாணவராக இருந்த காலத்திலேயே கழகத்தின்  தூணாக இருந்து வளர்த்தவர் தான் வீரக் கண்ணு . இவரது அண்ணனும் நகர செயலாளராக சிறப்பாக பணியாற்றி வருகிறார். திமுகவின் கிளை செயலாளர் பதவிக்கு வருவது எவ்வளவு சிரமம் என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் ஐந்து முறை   எம்.எல்.ஏவாக இருந்து சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். கட்சியால் தனக்கு என்ன லாபம் என்று நினைக்காமல் கட்சிக்காக உழைத்துக் கொண்டிருப்பவர்கள்தான் இந்த குடும்பத்தினர்.

ஒவ்வொரு மணவிழாவிலும் நான் ஒன்றை மறக்காமல் கூறுவது உண்டு. நடந்துள்ள இந்த திருமணம் ஒரு சீர்திருத்தத்தை திருமணம் நடந்துள்ளது.  1

நீதி அரசர் புகழேந்தி  மணவிழாவுக்கு  வந்துள்ளார். நீதி அரசர் மகாதேவன் வர உள்ளார். நமது கணேசன் வந்துள்ளார். தமிழில் பேசிய நீதியரசர்களிடம்  பல ஆண்டு காலமாக நாங்கள் தொடர்ந்து வைக்கும் கோரிக்கை  தமிழை  உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் வழக்காடு  மொழியாக்க வேண்டும்  சட்டமன்றத்தில் முதல்வராக இருந்த கருணாநிதி இதுகுறித்து தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்பி வைத்துள்ளார்.

1967க்கு முன்னால் இப்படி நடைபெறும் சீர்திருத்த திருமணங்கள்  செல்லாது.  அண்ணா முதல்வரான பிறகு தான் சீர்திருத்த திருமணங்களும்  சட்டப்படி செல்லும் என  சட்டத்தை இயற்றினார்.  தமிழ் மொழி செம்மொழி அந்தஸ்தை பெற்று தந்தவர் கலைஞர்.

இந்த மணவிழாவில் பேசிய நீதியரசர், பதினாறும் பெற்று பெருவாழ்வு  வாழுங்கள் என்றார்.  16  என்பது  16 குழந்தைகள் அல்ல.  16 செல்வங்கள்.  தமிழகத்தில்   குறைந்த அளவில் குழந்தைகள் பெற்றுக்கொண்டதால் இப்போது   தமிழகத்தின் மக்கள் தொகையை காட்டி மக்களவையில் தமிழகத்தின் பலத்தை குறைக்க முயற்சி நடக்கிறது.

இவ்வாறு அவர்  பேசினார்.  விழாவில்   அமைச்சர்கள், எம்.பி, எம்.எல்ஏக்கள்  பங்கேற்றனர். அதன் பிறகு  மினி பஸ்களை  முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த விழாவில் பங்கேற்ற முதல்வருக்கு   தஞ்சாவூர் தட்டு பரிசாக வழங்கப்பட்டது.

விழாவில்  அமைச்சர்கள்,  எம்.பி. எம்.எல்.ஏக்கள் பங்கேற்றனர்.

 

error: Content is protected !!