Skip to content

75% சதவீத காவலர்களுக்கு குடியிருப்புகள் கட்ட இலக்கு-டிஜிபி சைலேஸ்குமார் யாதவ்

கோவை, பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் மேற்கு காவல் நிலையம் பின்புறம் 3.39 ஏக்கர் பரப்பளவில் 79 கோடியே 15 லட்சம் மதிப்பில் புதிய காவலர் குடியிருப்புகள் கட்டுவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுகட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை இன்று தமிழக காவலர் வீட்டு வசதி வாரிய டிஜிபி சைலேஸ் குமார் யாதவ் நேரில் ஆய்வு செய்தார் . பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது.. தமிழகத்தில் காவல்துறைக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் காவல்துறைக்கு 54 சதவீதத்திற்கும் அதிகமாக குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது.
75% காவலர்களுக்கு குடியிருப்புகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் 896 குடியிருப்புகள் கட்ட தமிழக முதல்வர் அண்மையில் அடிக்கல் நாட்டில் பணிகள் துவங்கியுள்ளது தமிழகத்தில் வாடகை கட்டிடங்களில் செயல்பட்டு வரும் காவல் நிலையங்கள் இல்லாத நிலையை ஏற்படுத்த அரசு காவலர் புதிய காவல் நிலையங்கள் கட்டுவதற்கு இந்த ஆண்டு 420 கோடி ரூபாய் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த ஆய்வின்போது கோவை சரக ஐஜி செந்தில் குமார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பொள்ளாச்சி காவல் உதவி கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங் உடன் இருந்தனர்.

error: Content is protected !!