Skip to content

தொடரும் பதற்றம்! விமானப்படை கட்டுப்பாட்டில் ஸ்ரீநகர் விமான நிலையம்…

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை தொடர்ந்து ஸ்ரீநகர் விமான நிலையம் இந்திய விமானப்படை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியா தரப்பில் இன்று அதிகாலை பதிலடி கொடுக்கப்பட்டது. ஆபரேஷன் சிந்தூர் என்ற தலைப்பில் பதிலடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதேபோல் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்தும் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தின் போது இந்திய விமானங்களை தாக்க வந்த பாகிஸ்தான் போர் விமானம் ஒன்றும் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்படுகிறது. தீவிரவாத முகாம்களை நோக்கி இந்திய ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், விமானப்படை கட்டுப்பாட்டில் ஸ்ரீநகர் விமான நிலையம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை தொடர்ந்து ஸ்ரீநகர் விமான நிலையம் இந்திய விமானப்படை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. அனைத்து பயணிகளின் விமான நடவடிக்கைகளும் மறு அறிவிப்பு வரும்
வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!