Skip to content

தஞ்சையில் மாடு திருடியவர் கைது….

தஞ்சை அருகே வல்லம் ஏகௌரி அம்மன் நகர் பகுதியை சேர்ந்த முத்து என்பவரின் மகன் விஸ்வநாதன் (40). இந்நிலையில் கடந்த 27ம் தேதி இவரது மாட்டை வல்லம் ஆலக்குடி ரோடு பகுதியை சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகன் மணிகண்டன் (40) திருடி செல்ல முயன்றுள்ளார். மாடு கத்திய சத்தம் கேட்டு வெளியில் வந்த விஸ்வநாதன் மாட்டை திருட மணிகண்டன் முயற்சிப்பதை பார்த்து அக்கம்பக்கத்தினர் உடன் சேர்ந்து அவரை பிடித்து வல்லம் போலீசில் ஒப்படைத்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வல்லம் எஸ்ஐ பொறுப்பு மோகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!