Skip to content

மத்திய அரசை கண்டித்து-இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தஞ்சை மன்னர் அரசு சரபோஜி கல்லூரி நுழைவு வாயில் முன்பு யு ஜி சி சட்ட திருத்த மசோதா நகலை எரித்து இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களின் பெயர்களை மறைத்து ஆர் எஸ் எஸ் அமைப்பைச் சேர்ந்த தலைவர்களை யுஜிசி பாடத்திட்டத்தில் மத்திய அரசு இணைத்து இருப்பதற்கு கண்டனம் தெரிவித்து

தஞ்சை அரசு மன்னர் சரபோஜி கலைக் கல்லூரியில் பயின்று வரும் இந்திய மாணவர் சங்கத்தினர் கல்லூரி நுழைவு வாயில் முன்பு யுஜிசி சட்ட திருத்த மசோதா நகலை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்று யுஜிசி சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார்கள்.

மாணவர்கள் யுஜிசி சட்ட திருத்த மசோதா நகலை எரிக்க முயன்ற போது காவல்துறையினர் தடுத்ததால் இருவருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

error: Content is protected !!