சென்னை மெரினா கடற்கரையில் ரூ.1.43 கோடி மதிப்பீட்டில் ‘கற்றனைத் தூறும் அறிவு’ என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். கற்றனைத் தூறும் அறிவு! சாதனைச் சரித்திரம் நூலினையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் திமுக இளைஞரணி சார்பில் நிறுவப்பட்டுள்ள கலைஞரின் முழு உருவ வெண்கல சிலையை காணொலிக் காட்சி வாயிலாக முதலமைச்சர் திறந்து வைத்தார்.

