திருச்செந்தூரில் கடல் சுமார் 70 அடி தூரம் உள்வாங்கி காணப்பட்டது. சுற்றுலா பயணிகள் பக்தர்கள் பச்சை படிந்த பாறை மேல் ஏறி நின்று குளித்து புகைப்படம் எடுத்து வருகிறார்கள்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் ஒட்டி அமைந்துள்ள கடலானது அங்கு வரக்கூடிய பக்தர்களை ஈர்க்கக்கூடிய வகையில் உள்ளது. வரக்கூடிய பக்தர்கள் அனைவரும் இந்த கடலில் புனித நீராடி பின்னர் சாமி தரிசனம் செய்வது வழக்கம். குடும்பத்தோடு கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் சிறுவர், சிறுமியர்கள் இந்த கடலில் நீராடுவதுடன் கடற்கரையில் ஓடி விளையாடி தங்களது பயண களைப்பை கலைந்து இளைப்பாறுவார்கள். இந்த கடல் பௌர்ணமி, அமாவாசை போன்ற நாட்களில் உள்வாங்குவதும், கடல் நீர் சீற்றத்துடன் வெளியேறுவதும் நிகழும்.
சனிக்கிழமை தினமான இன்று கடல் சுமார் 70 அடி தூரம் உள்வாங்கி காணப்பட்டது. பக்தர்கள் நீராடும் பகுதியான செல்வ தீர்த்தம் பகுதிக்கு எதிரே 70 அடி தூரம் கடல் உள்வாங்கியதால் கடலில் உள்ளே இருந்த பச்சை பாசி படர்ந்த பாறைகள் வெளியே தெரிந்தன. இருந்த போதும் பக்தர்கள் கடலில் ஆழ பகுதிகளுக்கு சென்று நீராடி வருகின்றனர் பக்தர்கள் சுற்றுலா பயணிகள் பாறைகள் வெளியே தெரிந்ததால் மீன்களை பிடிப்பதற்காக ஒரு கொக்கு பச்சைப் பாறையில் மேல் ஏறி அமர்ந்து காத்திருந்தன. பக்தர்கள் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பாறையில் அமர்ந்து குளித்து புகைப்படம் எடுத்து குடும்பம் குடும்பமாக குளித்து வருகிறார்கள் எந்த ஒரு அச்சம் இன்றி பக்தர்கள் குளித்து வருகிறார்கள்.