Skip to content

டூவீலரில் முந்திசென்ற நபரை குடிபோதையில் தாக்கிய 3 பேர் கைது

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கணபதி பாளையத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன் இவர் அப் பகுதியில் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார், இந்நிலையில் ஈஸ்வரன் தனது இரு சக்கர வாகனத்தில் கோவிந்தாபுரம் வழியே வரும்பொழுது கோவிந்தாபுரம் முதல மடா பகுதி சேர்ந்த ராஜன் கண்ணன்,சிவராஜ், சிவா, என நான்கு பேர் இருசக்கர வாகனம் புல்லட்டில் குடிபோதையில் வாகனத்தை இயக்கி ஈஸ்வரன் இருசக்கர வாகனத்தை மீண்டும் பொழுது தகாத வார்த்தை பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர் மேலும் நான்கு பேரும் ஈஸ்வரனை குடிபோதையில் தாக்கியதால் காயம் அடைந்த அவர் வேட்டைக்காரன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு செய்து மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் ஈஸ்வரன் புகார் கொடுத்ததன் பெயரில் ஆனைமலை காவல் நிலைய போலீசார் கண்ணன், சிவா, சிவராஜ் மூன்று பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர் மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ராஜனை போலீசார் தேடி வருகின்றனர் .

error: Content is protected !!