மணிரத்தனத்தின் பட்டறையில் உருவாக்கப்பட்ட கமல், சிம்பு கூட்டணியின் தக்லைப் பெரும் எதிர்பார்ப்பு, பரபரப்புகளுக்கு மத்தியில் இன்று கர்நாடகம் தவிர மற்ற இடங்களில் திரைக்கு வந்து உள்ளது.
கமல் ஒரு தாதா. டெல்லியை சுற்றி கதை நகர்கிறது. மகேஷ் சஞ்ச்ரேகரும் ஒரு தாதா. இவர்களுக்கு இடையே ஏற்படும் மோதல், இதில் ஒரு சிறுவன்( சிம்பு) கமலை காப்பாற்றுகிறான். அதனால் அந்த சிறுவனை கமலே வளர்க்கிறார்.
பின்னர் சிம்புவை தனது தொழிலில் வரிசாக உருவாக்க முயற்சிக்கிறார் கமல். ஒரு கட்டத்தில் சிம்பு தனக்கு எதிராக செயல்படுவதாக கமல் சந்தேகப்படுகிறார்.தன்னையே சந்தேகிக்கிறாரே என அறிந்த சிம்பு வேதனை கொள்கிறார்.
இதை தெரிந்து கொண்ட எதிர்தரப்பு கேங், கமல், சிம்பு இடையே பிளவை உண்டாக்குகிறது. இருவரும் இரு துருவங்களாகி விட்டனர். கமலை தீர்த்து கட்டிவிட்டு, அந்த இடத்துக்கு தானே வந்துவிட துடிக்கிறார் சிம்பு. இதற்காக அவர் செய்யும் முயற்சிகள், அதை முறியடிக்கும் கமல்…. இப்படியாக கதை செல்கிறது. பிரேமுக்கு பிரேம் விறுவிறுப்பு.
கேங்ஸ்டராக வரும் கமல் மிரட்டுகிறார். நடிப்புன்னா….. நான் தான் என்று மீண்டும் நிரூபித்துள்ளார். சண்டை காட்சிகளில் இன்னமும் அனல் தெறிக்கிறது.
குடும்ப பாங்கான பாத்திரம் ஏற்றிருந்தாலும், அபிராமியும் கைதட்டலை அள்ளுகிறார். முதல்பாதி மெதுவாக நகர்வது போல தெரிந்தாலும், இடைவேளைக்கு பிறகு வேகமெடுத்து ரசிகர்களையும் சேர்த்தே வேகப்படுத்துகிறது.
கமல், சிம்பு கூட்டணி ஜொலிக்கிறது. கமலின் மனைவியாக அபிராமி, குடும்ப பாங்கான நடிப்பு, காதலியாக திரிஷா,
காதல்ன்னு வந்துட்டா, கமல், திரிஷாவை கேட்கவா வேண்டும்.? நடிக்கல…. நிஜம் போலவே இருக்கு. வயதாகி விட்டா என்ன, பழுத்த கிழம் இல்ல, பழுத்த பழுமாக இனிக்கிறார்கள் காதல் காட்சிகளில். கமல், திரிஷாவுக்கு அந்த நாள் ஞாபகம் ரொம்பவே வந்து விட்டது போல ரசிகர்களை உ ச்சத்துக்கு கொண்டு செல்கிறார்கள்.
சிம்புவும் தன் பங்குக்கு விளாசுகிறார். மாறுபட்ட சிம்புவை பார்க்க முடிகிறது. ஏ.ஆர். ரகுமானின் இசை படத்திற்கு ஒரு நல்ல பின்னணியை தந்துள்ளது. கமல், சிம்பு ஜோடியை சரியாக பயன்படுத்தி தனது முத்திரையை பதித்துள்ளார் மணிரத்னம்.
ஆக்ஷன், த்ரில் …….என ஒரு கேங்ஸ்டர் படத்தை வித்தியாசமான கோணத்தில் தந்திருக்கிறார் மணிரத்னம். ரசிர்களுக்கு ரொம்ப பிடிக்கும்.