கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாமை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். அதைத்தொடர்ந்து சிதம்பரம் லால்புரத்தில் முன்னாள் தமிழ்நாடு காங். தலைவர் இளையபெருமாள் நூற்றாண்டு அரங்கம் திறப்பு விழாவில் கலந்து கொண்டு அரங்கத்தையும், இளையபெருமாள் சிலையையும் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்து பேசினார். முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
வரலாற்று சிறப்பு மிக்க நாளாக இந்த நாள் அமைந்திருக்கிறது. இளையபெருமாள் அரங்கம் திறந்து வைத்திருக்கிறேன். பெருந்தலைவர் பிறந்தநாளில் மக்கள் குறைகளை தீர்க்க உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து விட்டு வந்திருக்கிறேன்.முதல்வரின் முகவரி, மக்களுடன் முதல்வர் திட்டதித்தில் பல முாகம்கள் நடத்தினோம். கூடுதல் தலைைம செயலாளர் அமுதா இதுபற்றி சொன்னார்கள். அதன் அடுத்த கட்டமாக உங்களுடன் ஸ்டாலின் தொடங்கி உள்ளோம். முகாம் நடக்கும் இடம் 2 தினங்களுக்கு முன்னதாக வந்து சொல்லி விடுவர்கள். மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டம், மக்களைத்தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி என்ற முன்னெடுப்பு போல இந்த திட்டத்துக்கு உங்களைத் வீடு தேடி வருவார்கள்.
கடந்த காலங்களில் தமிழகத்திற்கு உழைத்தவர்களையும் கொண்டாடுகிறோம். அந்த வகையில் தான் பெரியவர் இளையபெருமாள் அரங்கம் திறந்து வைத்ததில் பெருமை அடைகிறேன். பட்டியல் இன மக்களுக்கான உரிமைகளை பெற பாடுபட்டவர் இளையபெருமாள். திருமாளவனின் மக்களவை தொகுதியில் இந்த அரங்கத்தை நான் திறந்து வைத்திருக்கிறேன். திருமாவளன் இந்த தொகுதி எம்.பி. மட்டுமல்ல, சிதம்பரம் சீர்திருத்த வாதியாக திகழ்ந்து வருகிறார். செல்வப்பெருந்தகை, பாலகிருஷ்ணன், காதர் மொய்தீன், வேல்முருகன், அழகிரி, முத்தரகன் என எல்லோரும் இங்கு வந்திருக்கிறார்கள்.நம்முடைய திராவிட மாடல் அரசுக்கு துணையாக இருப்பவர்கள், மார்க்சிய சிந்தனை உள்ளவா்கள், காந்திய சிந்தனை, பெரியார் சிந்தனை, என அனைவரும் ஓரணயில் திரண்டு உள்ளோம். இரட்டை பானை முறையை எதிர்த்து போராடியவர். காவல்துறையில் பணியாற்றியபோது, அங்கும் போராடியவர் இளையபெருமாள். ஒன்றுபட்ட தென்னாற்காடு, தஞ்சை மாவட்டங்களில் சமூக நீதிக்கான போராட்டங்களை முன்னெடுத்தவர் இளையபெருமாள். இதற்காக சிறை சென்றார். ஆதி திராவிட மக்களின் எழுச்சிக்கு காரணமாக இருந்தார். பள்ளியில் படிக்கும்போதே இரட்டைபானைகளை உடைத்தார்.
காங்கிரஸ் பேரியக்கத்தில் இருந்து முதல் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் வென்றார். 3 முறைந எம்.பியாக இருந்தார். எம்.எல்.ஏ பதவியும் வகித்தவர். பழங்குடியின மக்கள் மேன்மைக்காக அகில இந்திய தீண்டாமை ஒழிப்பு கமிட்டியை உருவாக்கி அதன் முதல் தலைவராக நியமிக்கப்பட்டார். அந்த கமிஷன் தலைவராக இருந்து அறிக்கை தயாரித்தார். அந்த அறிக்கையை தாக்கல் செய்ய புறப்பட்டபோது, அவர் தங்கி இருந்த அறையில் புகுந்து தாக்கினார்கள். அப்போது திமுக எம்.பி. இரா செழியன் கையில் கொடுத்து அந்த அறிக்கையை தாக்கல் செய்ய சொன்னார். தமிழ்நாட்டில் 1971ல் அனைத்து சாதியினரும் அர்ச்சர் ஆக்கலாம் என சட்டம் இயற்றப்பட்டது. அதற்கு ஆதாரமாக இருந்தது இளையபெருமாள் கமிஷன் அறிக்கை. அதற்கு முன்னர் அந்த சிலர் மட்டுமே அர்ச்சகர்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் என்பதற்கு இளையபெருமாள கமி்டி அறிக்கை தான் முக்கயமானது. தோழர் ஜீவா, காமராஜர் என அதைது தரப்பினர் அன்பை பெற்றவர் இளைய பெருமாள், தான் நடத்திய மாநாட்டுக்கு கலைஞரை அழைத்தார். ஜூன் 3ம் தேதி கலைஞர் பிறந்தார். அதே ஜூன் மாதம் 26ம் தேதி பிறந்தவர்தான் இளையபெருமாள். அவரது பணிகளை சிறப்பிக்க நினைவரங்கம் அமைக்கவேண்டும் என சட்டமன்றத்தில் நான் அறிவித்தேன். இது திராவிட மாடல் அரசு, அவருக்கு செலுத்துகிற நன்றிகடன். தமிழ்நாடு ஓரணியில் இருக்கும்போது காவி கூட்டத்தின் எண்ணம் பலிக்காது. சமூக நீதி திட்டங்களுக்கு தோழமை கட்சியினர் துணை நிற்கிறார்கள்.
மக்களின் தேவை அறிந்து தீர்த்து வைப்பது தான் திராவிட மாடல் அரசு, எனவே டில்லி அணியின் காவித்திட்டம் தமிழ் நாட்டில் பலிக்காது.தமிழ்நாடு வரலாற்றில் ஆதிதிராவிடர்களுக்கு அதிகமான திடடங்கள் கொண்டு வந்துள்ளோம். எல்லோம் மாறும். மாற்றுவேன். இளைய பெருமாள் போன்றவர்கள் உழைப்பு வழிகாட்டும்.. குறிஞ்சிப்பாடி, அருகே கொடுக்கன்பாளையத்தில் 150 ஏக்கரில் தோல் அல்லாத காலணி தொழில் பூங்கா ரூ.75 கோடியில் அமைக்கப்படும். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாதபடிஇது அமையும் இந்த பூங்காவில் குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி பகுதிகளை சேர்ந்த 12 ஆயிரம் பெண்களுக்கு வேலை வாய்பபு கிடைக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.க்கை தயாரித்தார். அந்த அறிக்கையை தாக்கல் செய்ய புறப்பட்டபோது, அவர் தங்கி இருந்த அறையில் புகுந்து தாக்கினார்கள். அப்போது திமுக எம்.பி. இரா செழியன் கையில் கொடுத்து அந்த அறிக்கையை தாக்கல் செய்ய சொன்னார். தமிழ்நாட்டில் 1971ல் அனைத்து சாதியினரும் அர்ச்சர் ஆக்கலாம் என சட்டம் இயற்றப்பட்டது. அதற்கு ஆதாரமாக இருந்தது இளையபெருமாள் கமிஷன் அறிக்கை. அதற்கு முன்னர் அந்த சிலர் மட்டுமே அர்ச்சகர்.அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக்கலாம் என்பதற்கு இளையபெருமாள கமி்டி அறிக்கை தான் முக்கயமானது. தோழர் ஜீவா, காமராஜர் என அதைது தரப்பினர் அன்பை பௌற்றவர்.இளைய பெருமாள் தான் நடத்திய மாநாட்டுக்கு கலைஞரை அழைத்தார். ஜூன் 3ம் தேதி கலைஞர் பிறந்தார். அதே ஜூன் மாதம் 26ம் தேதி பிறந்தவர்தான் இளையபெருமாள். அவரது பணிகளை சிறப்பிக்க நினைவரங்கம் அமைக்கவேண்டும் என சட்டமன்றத்தில் நான் அறிவித்தேன். இது திராவிட மாடல் அரசு, அவருக்கு செலுத்துகிற நன்றிகடன். தமிழ்நாடு ஓரணியில் இருக்கும்போது காவி கூட்டத்தின் எண்ணம் பலிக்காது. சமூக நீதி திட்டங்களுக்கு தோழமை கட்சியினர் துணை நிற்கிறார்கள். மக்களின் தேவை அறிந்து தீர்த்து வை்ப்பது தான் திராவிட மாடல் அரசு, எனவே டில்லி அணியின் காவித்திட்டம் தமிழ் நாட்டில் பலிக்காது.தமிழ்நாடு வரலாற்றில் ஆதிதிராவிடர்களுக்கு அதிகமான திடடங்கள் கொண்டு வந்துள்ளோம். எல்லோம் மாறும். மாற்றுவேன். இளைய பெருமாள் போன்றவர்கள் உழைப்பு வழிகாட்டும்.. குறிஞ்சிப்பாடி, அருகே கொடுக்கன்பாளையத்தில் 150 ஏக்கரில் தோல் அல்லாத காலணி தொழில் பூங்கா ரூ.75 கோடியில் அமைக்கப்படும். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாதபடிஇது அமையும் இந்த பூங்காவில் குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி பகுதிகளை சேர்ந்த 12 ஆயிரம் பெண்களுக்கு வேலை வாய்பபு கிடைக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.