Skip to content

மாடு குறுக்கே பாய்ந்ததால் விபரீதம்- திருச்சியில் எஸ்எஸ்ஐ பலி

திருச்சி ஏர்போர்ட் வயர்லெஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் இருதய பிரான்சிஸ் (67 ) ஓய்வு பெற்ற எஸ் எஸ் ஐ. இவர் இன்று காலை தனது டூவீலரில் திருச்சி காந்தி மார்க்கெட் செல்வதற்காக சென்றார். கொட்டப்பட்டு அகதிகள் முகாம் அருகே வந்தபோது குறுக்கே மாடு பாய்ந்தது.
அப்போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் அந்த மாடு மீது மோதியை தூக்கி எறியப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இது குறித்த புகாரின் பேரில் தெற்கு போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!