உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா, IPS., தலைமையில் மாவட்ட காவல் லுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் காவல் கண்காணிப்பாளர் மகிழமரக்கன்று நடப்பட்டது. அவரைத் தொடர்ந்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் பிரேமானந்தன், தலைமையகம், ஜெயச்சந்திரன், மது விலக்குப்பிரிவு மற்றும் துணைக் காவல்
கண்காணிப்பாளர்கள் முத்துக்குமார், மாவட்ட குற்றப்பிரிவு, கல்யாணகுமார், மாவட்ட குற்ற ஆவண காப்பகம், வெங்கடாச்சலம், ஆயுதப்படை மற்றும் காவல் ஆய்வாளர்கள் ஆகியோர்களால் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.