Skip to content

திருச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தை பூட்டி விவசாயிகள் திடீர் தர்ணா… பரபரப்பு

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள உதவி கலெக்டர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது .
கூட்டத்திற்கு உதவி கலெக்டர் அருள் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். அப்பொழுது திடீரென  அலுவலக வாயிலை பூட்டி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில்
சின்ன சூரியூரில் உள்ள 100 ஏக்கர் அரசு தரிசு தினத்தை போலி பட்டா மூலமாக பிளாட் போட்டு விற்பனை செய்ததை கண்டித்தும், திருச்சி உறையூர் சின்ன செட்டி தெருவில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் விசாலாட்சி அம்மன் கோவில் பின்புறம் உள்ள நந்தவனத்தில் அமைந்திருக்கும் திருகாகபுஜண்டா சித்தா மகரிஷி கோவில் இடத்தை ஆக்கிரமிப்பு செய்யாமல் தடுக்க வலியுறுத்தியும்
விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார் விவசாய சங்க தலைவர் அய்யக்கண்ணுவிடம் பேச்சுவார்த்தை செய்தார்கள்.  பேச்சு வார்த்தையில் உடன் பாடு ஏற்பட்டதை தொடர்ந்து போராட்டத்தை விவசாயிகள் கைவிட்டனர். இச்சம்பவத்தால் திருச்சி உதவி கலெக்டர் அலுவலகத்தில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.அலுவலக அறைக்குள் அதிகாரிகள் மற்றும்விவசாயிகள் இருந்தனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது.பிறகு போலீசார் சம்பவத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட ஐயாக்கண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. பூட்டிய அலுவலகத்தை திறந்துவிட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

error: Content is protected !!