Skip to content

திருச்சியில் வாகனம் மோதி வாலிபர் பலி…

  • by Authour

கேரளா மாநிலம் ஆலப்புழை மாவட்டம் எண்ணக்காடு பெரிலிங்கபுரம்,கட்டிலாயில் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கரன்குட்டி. இவருடைய மகன் 29 வயதான அனுராக். இவர் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் மேலாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் தனது பணியை ராஜினாமா செய்து விட்டு சொந்த ஊரான கேரளா மாநிலத்திற்க்கு தனது மோட்டார் பைக்கில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.அப்போது கொணலை பகுதியில் வந்து கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத வாகனம்

மோதிவிட்டு தப்பிச் சென்றது.இந்த விபத்தில் கேரள வாலிபர் அனுராக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த சிறுகனூர் போலீசார் சம்ப இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற் றி உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் விபத்து குறித்து சுறுகனூர் போலீசார் வழக்கு பதிவு செய து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!