Skip to content

திருச்சி சிறையில் இளைஞர் சித்ரவதை: சிபிசிஐடி விசாரணைக்கு ஐகோர்ட் உத்தரவு

மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த அங்கம்மாள், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: எனது மகன் ஹரிஹர சுதன். இவரை 2020-ம் ஆண்டு போதைப்பொருள் வழக்கில் மதுரை எஸ்.எஸ். காலனி போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் அவருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி 400 மதிப்பெண் பெற்றார். பின்னர் ஐடிஐ படிக்க விண்ணப்பித்தார்.

இந்த தகவல் தெரிந்து என் மகனுக்கு சிகிச்சை அளிக்கக்கோரி சிறை அதிகாரிகளுக்கு மனு அனுப்பினேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என் மகனை சிறையில் தாக்கியது மனித உரிமை மீறல். எனவே திருச்சி சிறைத்துறை டிஐஜி பழனி, துணை ஜெயிலர் மணிகண்டன் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என் மகனுக்கு சிறையில் நடந்த கொடுமைகள் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். தனிமைச் சிறையில் இருக்கும் என் மகனை விடுவிக்கவும், உரிய சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து, மனுதாரரின் மகன் ஹரிஹரசுதன் சிறையில் தாக்கப்பட்டது தொடர்பாக அவரது தாயார் அளித்த புகார் மற்றும் ஜெயிலர் மணிகண்டன் அளித்த புகார் இரண்டும் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்படுகிறது. மனு முடிக்கப்படுகிறது என உத்தரவிட்டனர்.

 

error: Content is protected !!