திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து கிளம்பிய ஒரு டவுன் பஸ், பெரியார் சிலை ரவுண்டானாவில் திரும்பியது. அப்போது திடீரென ஒரு இருசக்கர வாகனம் ரோட்டை கடக்க முயன்றது. அந்த டூவீலரில் 3 பேர் இருந்தனர். அவர்கள் 3 பேரும் அதிர்ச்சியில் கீழே விழுந்தனர். இதனால் தனியார் பஸ் டிரைவர் திடீரென்று பிரேக் போட்டதால்
பேருந்தில் வாசல் அருகே இருந்த கல்லூரி மாணவி பேருந்தில் இருந்து சாலையில் கீழே விழுந்தார். இந்த காட்சி அருகில் இருந்த கடையின் சிசிடிவி காட்சியில் பதிவானது. டூவீலரில் பயணித்த நபர்களும் பேருந்தில் இருந்து கீழே விழுந்த மாணவிக்கும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.