திருச்சி மாநகராட்சியின் முன்னாள் மேயரும், காங்கிரஸ் பிரமுகர்களில் ஒருவருமான சுஜாதா இன்று காலமானார். நேற்று இரவு அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால் புத்தூர் 4 ரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் உயிர் பிரிந்தது. அவரது உடல் அண்ணாமலை நகரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. தற்போதும் அவர் மாநகராட்சியின் 31வது வார்டு கவுன்சிலராக இருக்கிறார். 2009ம் ஆண்டு மேயராக இருந்த சாருபாலா, மக்களவை தேர்தலில் போட்டியிட மேயர் பதவியை ராஜினாமா செய்ததால் சுஜாதா மேயரானார்.

