Skip to content
Home » கள்ளத்தொடர்பால் பெண் மாயம்… திருச்சியில் மகன் போலீசில் புகார்..

கள்ளத்தொடர்பால் பெண் மாயம்… திருச்சியில் மகன் போலீசில் புகார்..

  • by Senthil

திருச்சி மாநகர் உறையூர் காந்திபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். இவரது மனைவி கண்ணகி வயது 47 இவர் திருச்சியில் உள்ள ஓட்டலில் சமையல் வேலை செய்து வந்தார்.இந்த நிலையில் கண்ணகிக்கு அழகு முருகன் என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனை அறிந்த அவரது கண்ணகியின் மகன் வினோத் அதிர்ச்சி அடைந்தார் .பின்னர் தாயை அவர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இந் நிலையில் வீட்டிலிருந்து வழக்கம் போல் வேலைக்கு புறப்பட்டுச் சென்ற கண்ணகி வீட்டிற்கு திரும்ப வரவில்லை இந்நிலையில் அவரை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து கண்ணகியின் மூத்த மகன் விமல் உறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரி பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கண்ணகியை தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!