திருச்சியை சேர்ந்தவர் கவிஞர் நந்தலாலா, வங்கியாளராக பணி செய்த இவர் சிறந்த மேடை பேச்சாளர், திருச்சி குறித்து பல நூல்கள எழுதி உள்ளார். சிறிது காலம் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நந்தலாலா பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு இன்று காலமானார். நந்தலாலா பொதுவுடமை கொள்கையில் ஈடுபாடு கொண்டவர். நந்தலாலா மறைவுக்கு தமிழ் ஆர்வலர்கள், கவிஞர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கவிஞர் நந்தலாலா, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்க துணைத்தலைவராகவும் இருந்தார்.