Skip to content

திருச்சி அருகே அன்பில் சுந்தரராஜ பெருமாள் ஹம்ச வாகனத்தில் திருவீதி உலா…

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே அன்பில் சுந்தரராஜ பெருமாள் கோவில் வைகாசி விசாக திருவிழாவின் 3 ம் நாள் சுந்தராஜ பெருமாள் ஹம்சவாலத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு கட்சி அளித்தார்.

லால்குடி அருகே அன்பில் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுந்தரவல்லி தாயார் சமேத ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் கோவில் உள்ளது. பிரம்மனுக்கு அன்பினால் பெருமாள் உபதேசம் செய்ததால் இவ்வூருக்கு அன்பில் எனப்பெயர் பெற்றதாக கூறப்படுகிறது.

இக்கோவில் 108 வைணவ திவ்யதேச திருத்தலங்களில் 4-வது இடத்தில் உள்ளது. திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் பாடப்பெற்றது சிறப்பு ஆகும். சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் இக்கோவிலில் தேரோட்டம் நடைபெற்றதாக கோவில் குறிப்புகளில் காணப்படுகிறது.

காலப்போக்கில் கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தால் கோவில் தேர், மதில் சுவர்கள் சிதிலமடைந்து தேரோட்டம் நடைபெறவில்லை என இவ்வூர் பொதுமக்கள் கூறுகின்றனர். இதனையடுத்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ரூ.50 லட்சம் மதிப்பில் புதிய தேர் செய்யப்பட்டு் வெள்ளோட்டம் நடைபெற்றது

இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 25ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில் மூன்றாம் நாளான இன்று சுந்தராஜ பெருமாள் ஹம்ச வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகின்ற – ஜூன் 2 ம் ந்தேதி திருத்தேர் வடம் பிடித்தல் நடைபெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!