Skip to content

திருச்சியில் பென்சனர் சங்க மாநாடு, மகளிர் தின விழா….

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அனைத்து அரசு ஊழியர், ஆசிரியர் சங்கத்தின் மாவட்ட மாநாடு மற்றும் மகளிர் தின விழா இன்று காலை திருச்சி புத்தூர் டாக்டர் மதுரம் ஹாலில் நடந்தது.

மாவட்ட துணைத்தலைவர் ஆர்தர் காட்வின் தலைமை தாங்கினார். தொட்டியம் வட்ட துணைத்தலைவர் வசந்தா,

முசிறி எஸ். பாலா முன்னிலை வகித்தனர். வட்டார கல்வி அலுவலர் கவிஞர் ஜெயலட்சுமி, மாநில செயலாளர் வீ. பாலகிருஷ்ணன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநில துணைத்தலைவர் கவிஞர் நந்தலாலா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

மாநில தலைவர் ப. அருள் ஜோஸ் மாநாட்டு பேருரை ஆற்றினார். அப்போது அவர் பெண்களின் முன்னேற்றம் குறித்தும், குறிப்பாக தமிழ்நாட்டில் பெண்களுக்கான திட்டங்கள், சலுகைகள் குறித்தும் விளக்கியதுடன் பெண்களுக்கு மகளிர் தின வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

மாநில பொருளாளர் சந்திரசேகரன் தீர்மானங்களை வாசித்தார். மாநாட்டில் பெண்கள் கவுரவிக்கப்பட்டனர். மாவட்ட செயலாளர் மாரிமுத்து நன்றி கூறினார். மரியசூசை மாணிக்கம் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!