Skip to content

திருச்சி அருகே வாழைக்கு உரம் வைக்க சென்ற 2 பெண்கள் மின்சாரம் தாக்கி பலி…

திருச்சி மாவட்டம், சோமரசம் பேட்டை அடுத்துள்ள எட்டு மாந்திடல் பகுதியில் சூர்யா என்பவரின் வாழைத் தோட்டம் உள்ளது. தோட்டத்தில் மல்லியம்பத்து பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் மனைவி செல்வி(48), மல்லியம்பத்து நடுத்தெரு பகுதியைச் சேர்ந்த சக்திவேல் மனைவி ராதிகா(44) ஆகியோர் வேலை செய்து வருகின்றவர். இருவரும்
தோட்டத்திற்கு உரம் வைப்பதற்காக சென்று கொண்டிருந்தனர். அப்போது காற்றின் காரணமாக உயர் அழுத்த மின் கம்பி அறுந்து கீழே கிடந்துள்ளது. இதை கவனிக்காமல் இருவரும் மிதித்து விட்டனர். இதில் 2பேரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்த தகவலின் அறிந்த சோம்பரசன் பேட்டை காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மின்வாரியத்திற்கு தகவல் கொடுத்து மின் இணைப்பை துண்டித்து விட்டு 2பெண்களின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலைக்குச் சென்ற 2 பெண்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!