Skip to content
Home » திருச்சி வஉசி சிலைக்கு பாலாபிஷேகம்….. போலீசுடன் தகராறு செய்த 2 பேர் கைது

திருச்சி வஉசி சிலைக்கு பாலாபிஷேகம்….. போலீசுடன் தகராறு செய்த 2 பேர் கைது

  • by Senthil

கப்பலோட்டிய தமிழன் வ உ சி 152 வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள அவருடைய திருஉருவ சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.  அப்போது அங்கு வந்த  தமிழ்நாடு சோழிய வெள்ளாளர் இளைஞர் அணி சார்பாக  வஉசி  சிலைக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது.

பால் அபிஷேகம் செய்யக்கூடாது என கண்டேன்மென்ட் ஏசி கென்னடி மற்றும் காவல்துறையினர் தெரிவித்தனர். இதனால் பால் அபிஷேகம் செய்ய வந்தவர்களுக்கும், காவல்துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட   துறையூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன், தினேஷ்முத்து  ஆகிய 2பேரை  காவல் துறையினர் கைது செய்தனர் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!