Skip to content

நடந்து சென்ற வாலிபரிடம் பணம் பறிப்பு… 2 பேர் கைது

  • by Authour

அரியலூர் மாவட்டம், வெங்கனூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் பழனிச்சாமி (37). இவர் ஒரு வேலை விஷயமாக திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டிற்கு வந்தார் .அங்கு பஸ் நிலையம் அருகில் நடந்த சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர் இவரிடம் வந்து பணத்தை பறித்து எஸ்கேப் ஆகிவிட்டனர். இது குறித்த புகாரின் பேரில் கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வாசு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக சிந்தாமணியை சேர்ந்த குரு ( 20), மேல தேவதானம் பகுதியைச் சேர்ந்த அசோக் குமார் (21) ஆகிய 2 வாலிபர்களை கோட்டை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

error: Content is protected !!