மதுரையில் இன்று நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் 33 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன..
- முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் பிறந்தநாளான ஜூன் 3-ஆம் நாளைசெம்மொழி நாளாக நாடெங்கும் கொண்டாடுவோம்.
- கழகத்தின் தலைவராகப் பொறுப்பேற்றதுமுதல் எதிர்கொண்ட 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2020 ஊரகஉள்ளாட்சித் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், 2022 நகர்ப்புறஉள்ளாட்சித் தேர்தல், 2024 நாடாளுமன்றத் தேர்தல், இடைத்தேர்தல்களங்கள் என அனைத்திலும் மகத்தான வெற்றியைக் கழகம் பெற்றிடும்வகையில் வியூகத்தை வழங்கி, அந்த வெற்றிக்கு ஓயாது உழைத்திட்டவரும், தமிழ்நாட்டு மக்களின் பேராதரவுடன் முதலமைச்சர் பொறுப்பை ஏற்று, இந்தியாவுக்கே முன்னோடியான திட்டங்களைத் தமிழ்நாட்டில் செயல்படுத்தி வருபவருமான கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர்அவர்களுக்கு, பாராட்டுதல்களைத் தெரிவித்துக்கொள்வதுடன், எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் கழகக் கூட்டணி முழுமையான வெற்றிபெற்று, கழகத் தலைவர் அவர்கள் தொடர்ந்து முதலமைச்சர் பொறுப்பேற்க நாம் அனைவரும் அயராது உழைப்போம் என இப்பொதுக்குழு உறுதியேற்கிறது
- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் அரசு பொறுப்பேற்றது முதல் பேருந்துகளில் மகளிர், மாணவிகள், மாற்றுத் திறனாளிகள், திருநர்கள்ஆகியோருக்கு கட்டணமில்லா விடியல் பயணம், 1.14 கோடி இல்லத்தரசிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர்உரிமைத் திட்டம், பெண்களுக்கு மானியத்துடன் இளஞ்சிவப்பு (பிங்க்) ஆட்டோ, புதுமைப் பெண் திட்டம், அரசுப் பணிகளில் பணியாற்றும்பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு ஓராண்டு, பணியாற்றும் பெண்களுக்குத்தோழி விடுதி, வேலைக்குச் செல்லும் பெண்களின் குழந்தைகள் தங்கிட 17 சிப்காட் தொழிற்சாலைப் பூங்காக்களில் குழந்தைகள் காப்பகம், சுயஉதவிக்குழு சகோதரிகள் தயாரிக்கும் பொருட்களை எடுத்துச் செல்லஇலவசப் பயணத் திட்டம், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவுசெய்தவர்களுக்குக் கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற முன்னுரிமை, கோ-ஆப்டெக்ஸ் பொருட்களுக்கு 5 விழுக்காடு தள்ளுபடி, மகளிருக்குஆவின் தயாரிப்புப் பொருட்கள் குறைந்த விலையில் விற்பனை, இ-சேவைமையங்களில் 10 விழுக்காடு சேவைக் கட்டணம், மற்றும் சமூகநீதித்திட்டங்கள் போன்ற எண்ணற்ற சமூக நலத்திட்டங்களைக் கொண்டு வந்துமகளிரின் வாழ்வை மேம்படுத்தி, இந்திய அளவிலான பெண்பணியாளர்களில் தமிழ்நாட்டுப் பெண்கள் 42% என்கிற சாதனையையும்படைத்துள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்குஇப்பொதுக்குழு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறது.
- திமுகவில் ஆசிரியர்கள், பேராசிரியர்களைக் கொண்ட கல்வியாளர் அணி மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு தனி அணிகள் உருவாக்கம்.
- சுமார்200 இளம் பேச்சாளர்களை உருவாக்கி மாநிலம் முழுவதும் பொதுக்கூட்டபரப்புரைகளில் பங்கேற்கச் செய்தும், தொகுதி தோறும் கலைஞர்நூலகங்கள் எனத் தற்போது வரை 100-க்கும் அதிகமான நூலகங்கள்இளைஞர் அணியால் உருவாக்கப்பட்டுள்ளன. முத்தமிழறிஞர் பதிப்பகம்ஏற்படுத்தி அதன் மூலம் 20-க்கும் மேற்பட்ட நூல்கள் வெளியீடு; இளம்பேச்சாளர்கள் பயிற்சி முகாம்கள், தொகுதிதோறும் பாக முகவர்கள்பயிற்சிக் கூட்டங்கள் நடத்தி வருவது; இளைஞர் அறக்கட்டளை மூலம்மாதந்தோறும் நலிந்தோர் சுமார் 15 பேர்க்குக் குறையாமல் கல்வி, மருத்துவநிதி அளித்து உதவி வருவது, இளைஞர் அணி சார்பில் முரசொலி ஏட்டில்நாள் தோறும் ‘பாசறைப் பக்கம்’ எனும் தலைப்பில் ஒருபக்க அளவில்திராவிட இயக்க வரலாறுகளையும், கழக இலட்சியப் பயணத்தின் தியாகவரலாற்றையும் உயிரோட்டத்துடன் பதிவு செய்து வருவது போன்றசிறப்பான பணிகளை இளைஞர் அணிச் செயலாளரான மாண்புமிகு துணைமுதலமைச்சர் செய்து வருகிறார். வலிமைமிக்க இளையசமுதாயத்தை உருவாக்கி வரும் மாண்புமிகு துணை முதலமைச்சர் – கழகத்தின் இளம் தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின்செம்மாந்த பணிக்குத் துணை நிற்போம் என இப்பொதுக்குழுதீர்மானிக்கிறது.
- தமிழ்நாட்டிற்குத் தரவேண்டிய நிதியைத் தர மறுக்கும் ஒன்றிய அரசுக்குக் கண்டனம்.
- ஏழை-எளிய மக்களை வதைக்கும் நகைக்கடன் கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி உடனே நீக்க வேண்டும்.. உள்பட 25க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.