கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் ஒரே குடும்பத்தின் 3 பேர் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். தந்தையின் உடல் மரத்தில் தொங்கியபடி காணப்பட்டது. தாய் மற்றும் மகன் உடல்கள் அஜீஸ் நகர் அருகே தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள குளம் ஒன்றில் மிதந்தன.
அவர்கள் 3 பேரின் உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த மரணத்துக்கான காரணம் என்ன? என்பது பற்றி உடனடியாக தெரிய வரவில்லை. இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உளுந்தூர்பேட்டையில் தம்பதி மற்றும் மகன் என 3 பேர் மர்ம மரணம் அடைந்தது அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.