Skip to content

புதுகையில் நகர்புற நலவாழ்வு மையம் திறப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் தலைமைச் செயலகத்தில் இன்று காணொளி காட்சி வாயிலாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் ரூ4,778.75 கோடி செலவிலான 183 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து 10 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் . அதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தேர்வு நிலைப்பேரூராட்சி அமரகண்டான் வடகரையில் ரூ1.20கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நகர்புற நல்வாழ்வு மையத்தினை திறந்து வைத்த நிகழ்ச்சியில் ஆட்சியர் மு.அருணா கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து நல பெட்டகங்களை வழங்கினார். உடன் உதவி இயக்குனர் (பேரூராட்சிகள்) துவாரகநாத்சிங், புதுக்கோட்டை மாவட்ட சுகாதார அலுவலர் மரு.ராம்கணேஷ், பேரூராட்சி தலைவர் சுந்தரிஅழகப்பன், பேரூராட்சி செயல் அலுவலர் எஸ்.ஆர்.அண்ணாத்துரை, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் க.பிரேமலதா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர் .

error: Content is protected !!