Skip to content

கோவையில் தவெகவில் இருந்து விலகிய வைஷ்ணவி- VSB தலைமையில் இணைந்தார்

தமிழக வெற்றிக் கழகத்தை  சேர்ந்த  கோவை, கவுண்டப்பாளையம்  வைஷ்ணவி, அந்த கட்சிக்கு முழுக்கு போட்டார். தவெக  கட்சியினர் தரப்பில் தொடர்ந்து நிராகரிப்பு, உதாசீனம் மற்றும் மன உளைச்சலுக்கு ஆளாகி கட்சியில் இருந்து விலகினார். இது கட்சியின் உள்ளக நிலையை வெளிப்படுத்தும் முக்கிய நிகழ்வாகக் பார்க்கப்பட்டது.

தனது விலகல் குறித்து வைஷ்ணவி வெளியிட்ட அறிக்கையில்,

என் மனதை கல்லாக்கிக் கொண்டு இந்த கடிதத்தை எழுதுகிறேன். கடந்த மூன்று மாதங்களாக நிராகரிப்பு, தடைகள், மிரட்டல்கள் என தொடர்ச்சியான மன உளைச்சலை சந்தித்தேன். ஒரு பெண் அரசியலில் வளர்வது சிலருக்குச் சங்கடமாக இருந்தது போல உள்ளது. என் மக்கள் பணிக்கு முற்றுப் புள்ளி வைக்க முயற்சிக்கின்றனர், அதனால் நானே தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து என்னை விடுவித்துக்

கொள்கிறேன் என கூறி இருந்தார். அவரது இந்த நடவடிக்கை அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், “அரசியல் பணி தொடர விரும்பினால் எங்கள் கட்சிக்கு வரலாம்” என ஓர் அழைப்பை வெளியிட்டார். அதே நேரத்தில் ம.தி.மு.க வின் இணையதள ஒருங்கிணைப்பாளர் மினர்வா ராஜேஷ், “மக்கள் பணி என்றால் அது ம.தி.மு.க மட்டுமே. தலைவர் வைகோ மற்றும் துரை வைகோ தலைமையில் பணியாற்ற வாருங்கள்” என எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

இந்நிலையில், நேற்று  மாலை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின்  கோவை முகாமில் அவரை நேரில் சந்தித்த வைஷ்ணவி, தி.மு.க வில் இணைந்தார்.  அவருக்க திமுக  துண்டு அணிவித்து  விஎஸ்பி வரவேற்றார்.

error: Content is protected !!