கோவை மாவட்டம், வால்பாறை மற்றும் அருகில் உள்ள கேரளா அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி செல்லும் வழி சாலக்குடி வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் கூட்டமாகவும் தனியாகவும் சுற்றி வருகிறது தமிழ்நாடு வனத்துறை மற்றும் கேரளா வனத்துறையினர் கூட்டு ரோந்து பணியில் காட்டு யானைகள் சாலையில் வராமல் இருக்க தொடர்ந்து கண்காணித்து வனப்பகுதிக்குள் விரட்டி வருகின்றனர் கேரளா வனப்பகுதியில் இருந்து இடம் மாறும் காட்டு யானைகள் குறிப்பிட்ட நாட்கள் பிறகு மீண்டும் கேரளா வனப் பகுதிக்கு இடப்பெயர்கிறது இதனால் சுற்றுலா பயணம் செல்லும் பயணிகள் சாலையில் செல்லும் பொழுது அச்சத்துடன் செல்கின்றனர் மேலும் இப்பகுதியில் கபாலி என்று ஒற்றை யானை அவ்வப்போது வாகனங்களை துரத்தியும் மிரட்டியும் வருகிறது இந்நிலையில் வால்பாறையில் இருந்து சாலக்குடி அதரப்பள்ளி பால்ஸ் செல்லும் வழியில் சென்ற சுற்றுலா பயணிகள் சென்ற இருசக்கர வாகனத்தை மறித்து அட்டகாசம் செய்தது செய்வது அறியாமல் இருந்த சுற்றுலாப் பயணிகள் இருசக்கர வாகனத்தை விட்டு விட்டு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் காட்டிய யானை கூட்டத்தை வனப்பகுதியில் விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் வனத்துறையினர் கூறுகையில் தற்போது காட்டு யானைகள் நடமட்டும் அதிகம் உள்ளதால் நான்கு சக்கரம் மற்றும் இரு சக்கர வாகனத்தில் செல்லும் சுற்றுலாப் பயணிகள் காட்டு யானைகள் கண்டால் ஹாரன் அடிக்கக் கூடாது யானையில் வனப் பகுதிக்கு செல்லும் வரை தங்களது வாகனத்தை இயக்கக் கூடாது என தெரிவித்து சுற்றுலா பயணிகளுக்கு அறிவுறுத்தி வருகின்றனர் தற்போது காட்டு யானை கூட்டம் இருசக்கர வாகனத்தில் சென்ற நபர்கள்வழிமறித்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது .
