மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா சேத்தூர் கிராமம் மேல தெருவை சேர்ந்த மதுமோகன் (33). என்பவர் சொந்தமாக வேன் வைத்துள்ளார். இவர் வேனில் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்ட மாணவிகளை மயிலாடுதுறையில் உள்ள பள்ளிகளுக்கு விட்டு விட்டு மீண்டும் மயிலாடுதுறை இருந்து வீட்டிற்கு கொண்டு சென்று விடும் பணியையும் செய்து வருகிறார். இந்நிலையில் இன்று மாணவிகளை வீடுகளில் இருந்து அழைத்துக் கொண்டு பள்ளியில் விட்ட வேன் ஓட்டுநர் மதுமோகன் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் ஒரு மாணவியை வேனில் வருபவர்களின் பெயர் பதிவேடு எழுத வேண்டும் என்று கூறி எழுதி விட்டுக்கொடுத்து செல்லுமாறு மாணவியை வேனில் அவையாம்பாள் புறம் என்ற பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். மாணவி எதிர்ப்பு தெரிவிக்கவே மாணவியை மீண்டும் பள்ளியில் இறக்கிவிட்டு மதுமோகன் சென்றுள்ளார். இச்சம்பவம் குறித்து மாணவி பள்ளி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்ததன் பேரில் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சுகந்தி மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் ஆரோக்கியராஜ் மாணவ இடம் விசாரணை நடத்தியதை தொடர்ந்து போக்சோ வழக்கு பதிவு செய்து வேன் ஓட்டுநர் மதுமோகனை கைது செய்துள்ளனர். பட்டப் பகலில் மாணவியை பள்ளிக்கு சென்று விடாமல் அழைத்துச் சென்று வேன் ஓட்டுநர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
