Skip to content

துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனை திமுக ஆதரிக்காது- டிகேஎஸ் இளங்கோவன் பேட்டி

  • by Authour

இந்தியாவின் துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர்   கடந்த ஜூலை 21ம் தேதி திடீரென ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய  வரும் செப்டம்பர் 9ம் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில்  பாஜக வேட்பாளராக தமிழ்நாட்டை சேர்ந்தவரும்,  மகாராஷ்டிரா கவர்னருமான சி.பி. ராதாகிருஷ்ணன்   அறிவிக்கப்பட்டு உள்ளார்.

சி.பி. ராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டை சேர்ந்தவராக இருந்தாலும்,  அவர் பாஜக வேட்பாளர் என்பதால் அவரை திமுக ஆதரிக்காது என்று திமுக செய்தி தொடர்பாளர்  டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்து உள்ளார். மேலும் அவர் கூறுகையில் ஒரு தமிழரை தேர்வு செய்ததில் மகிழ்ச்சி.  இந்தியா கூட்டணி தேர்வு செய்யும் வேட்பாளரை திமுக ஆதரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள  சி.பி. ராதாகருஷ்ணன், பிரதமர் மோடி, பாதுகாப்பு அமைச்சர்  ராஜ்நாத்சிங்  உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து ஆசி பெற்றார்.
துணை ஜனாபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 7ம் தேதி தொடங்கி விட்டது.  21ம் தேதி கடைசி நாள்.  சி.பி. ராதாகிருஷ்ணன் எப்போது மனு தாக்கல் செய்வார் என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை.

 சி.பி. ராதாகிருஷ்ணன் திருப்பூரைச் சேர்ந்தவர்  இவரது  முழு பெயர்  சந்திரபுரம் பொன்னுசாமி ராதாகிருஷ்ணன்,  இவரது மனைவி பெயர் சுமதி, 2 குழந்தைகள் உள்ளனர். மகாராஷ்டிராவின் ஆளுநராக 2024-ம் ஆண்டு ஜூலை 31 அன்று பதவியேற்றார். அதற்கு முன்பு, அவர் ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஆளுநராக கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரியில்  நியமிக்கப்பட்டார். ஒன்றரை ஆண்டுகள்  அங்கு கவர்னராக பணியாற்றினார்.

1996-ம் ஆண்டில் தமிழக பாஜக செயலாளராக நியமிக்கப்பட்டார். கடந்த 1998, 1999-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் கோவையில் இருந்து இருமுறை எம்​.பி.​யாக தேர்வு செய்யப்பட்டார். கடந்த 2004 முதல் 2007-ம் ஆண்டு வரை தமிழக பாஜக தலைவராக பதவி வகித்தார். பாஜக தலைவராக இருந்த காலகட்டத்தில் கன்னியாகுமரி முதல் சென்னை வரை யாத்திரை மேற்கொண்டார்.

பாஜக தேசிய செயலாளர், தேசிய நிர்வாக குழு உறுப்பினர், கேரள மாநில பாஜக பொறுப்பாளர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார்.அரசியல் வாழ்க்கையை தாண்டி, ராதாகிருஷ்ணன் கல்லூரி காலத்தில் டேபிள் டென்னிஸில் சாம்பியனாகவும், ஓட்டப்பந்தய வீரராகவும் இருந்துள்ளார். கிரிக்கெட் மற்றும் கைப்பந்து அவருக்கு பிடித்தமான விளையாட்டுகள்.

இந்தச் சூழலில் குடியரசு துணைத் தலை​வர் தேர்தலுக்கான வேட்​பாளரை தேர்வு செய்​வது தொடர்​பாக தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யின் ஆலோசனை கூட்​டம் டெல்​லி​யில் சமீபத்​தில் நடை​பெற்​றது. இதில், வேட்​பாளரை தேர்வு செய்​யும் அதி​காரம் பிரதமர் மோடி, பாஜக தலை​வர் ஜே.பி.நட்டா ஆகியோ​ருக்கு வழங்​கப்​பட்​டது.

காங்​கிரஸ் உள்​ளிட்ட எதிர்க்​கட்​சிகள் அடங்​கிய இநதியா  கூட்​டணி சார்​பில் குடியரசு துணைத் தலை​வர் பதவிக்கு பொது வேட்​பாளரை நிறுத்த முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது. இதுதொடர்​பாக பல்​வேறு கட்​சிகளின் தலை​வர்​களு​டன் காங்​கிரஸ் தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்கே தொடர்ந்து ஆலோ​சனை நடத்தி வரு​கிறார். இன்றும் ஆலோசனை நடக்கிறது.  இன்று அல்லது நாளை இந்தியா கூட்டணி வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

துணை ஜனாதிபதி தேர்தலில் எம்.பிக்கள் மட்டுமே ஓட்டு போடுவார்கள். தற்​போது மக்​களவை​யில் ஒரு எம்​.பி., மாநிலங்​களவை​யில் 5 எம்​.பி.க்​கள் இடங்​கள் காலி​யாக உள்​ளன. எனவே, வரும் தேர்​தலில் 782 எம்.பி.க்கள் வாக்களிக்க உள்​ளனர். தேர்​தலில் வெற்றி பெற 50 சதவீத எம்​.பி.க்​களின் ஆதரவு தேவை. இதன்​படி, 391 எம்​.பி.க்​களின் ஆதரவை பெறும் வேட்​பாளர், புதிய குடியரசு துணைத் தலை​வ​ராக தேர்வு செய்​யப்​படு​வார்.

நாடாளு​மன்​றத்​தில் பாஜக தலை​மையி​லான தேசிய ஜனநாயக கூட்​ட​ணிக்கு 422 எம்​.பி.க்​களும்,  இந்தியா  கூட்டணிக்கு 312 எம்​.பி.க்​களும் உள்​ளனர். ஆளும் தேசிய ஜனநாயக கூட்​ட​ணிக்கு பெரும்​பான்மை பலம் இருப்​ப​தால், அந்த கூட்டணியின் வேட்​பாளர் சி.பி.​ராதாகிருஷ்ணன் வெற்றி பெறு​வது உறு​தி​. இதில் வெற்றி பெறுபவர் 2 ஆண்டுகள் மட்டுமே இந்த பதவியில்  இருப்பார்கள்.

“தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை மையமாக வைத்தே, கொங்கு மண்டலத்தை சேர்ந்த சி.பி.​ராதாகிருஷ்ணனுக்கு  உயரிய பதவியை பாஜக அறிவித்துள்ளது. இதுவும் பாஜகவின் தேர்தல் கணக்கு என்று  அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

error: Content is protected !!