புதுக்கோட்டை மாவட்டம் அரிமழம் ஊராட்சி ஒன்றியம் மிரட்டுநிலை ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் தொழிலாளர் தினத்தை யொட்டி
நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் ஆட்சியர் மு.அருணா கலந்து கொண்டார். கூட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கு
பாராட்டு சான்றிதழ் களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன்,
புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பா.ஐஸ்வர்யா, உதவி இயக்குனர்( ஊராட்சி கள் )
சா.மோகனசுந்தரம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்க. பிரேமலதா அரிமழம் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மேகலாமுத்து, மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளாட்சி தலைவர்கள், பிரதிநிதிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.