Skip to content

துணை ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு

நாட்டின் 16-வது துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை மாதம் 21-ந் தேதி பதவி விலகியதை தொடர்ந்து அந்த பதவிக்கு இன்று தேர்தல் நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்தது.

இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 21-ந்தேதி நிறைவு பெற்றதில் ஆளும் கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், எதிர்க்கட்சிகள் அடங்கிய ‘இந்தியா’ கூட்டணியின் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி ஆகிய இருவரும் போட்டியிட்டனர்.

தேர்தலுக்கான வாக்குப்பதிவு  நாடாளுமன்றத்தின் எப்-101 அரங்கில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணியோடு நிறைவு பெற்றது. காலை வாக்குப் பதிவு தொடங்கியவுடன் முதல் ஆளாக பிரதமர் நரேந்திர மோடி தனது வாக்கைப் பதிவு செய்தார்.

காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி, மாநிலங்களை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் தங்களின் வாக்கைப் பதிவு செய்தனர்.  காலை 10 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவில், மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் வாக்களித்தனர். மொத்தம் உள்ள 782 வாக்குகளில் 770 வாக்குகள் பதிவாகி உள்ளதாகவும் 12 பேர் புறக்கணித்தாகவும் கூறப்படுகிறது.

சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டு, தேர்தல் முடிவு இன்றே அறிவிக்கப்பட உள்ளது. எம்பி.க்களின் ஆதரவு அடிபப்டையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

 

error: Content is protected !!