ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை ஆற்றினார். அதில், “அதிமுக ஆட்சியில் அனைத்து துறைகளும் பின்னடைவை சந்தித்து மோசமான நிலையை அடைந்திருந்தது. இடியாப்ப சிக்கல் என்ற சூழலில்தான் நாங்கள் ஆட்சிக்கு வந்தோம். எங்கள் சாதனைகளை நாங்களே மிஞ்சும் அளவுக்கு திராவிட மாடல் 2.0 ஆட்சி இருக்கும்,” இவ்வாறு தெரிவித்தார்.

