திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பெத்த கல்லுப்பள்ளி புத்து கோவில் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் வெங்கடேசன் இவருக்கு சிவகங்கை மாவட்டம் குறிஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த கங்கா என்ற பெண்ணுடன் 13 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி உள்ளது.
பின்னர் இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை என மூன்று குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கங்கா தனது அம்மா வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இதுவரை கங்கா வீடு திரும்பாத காரணத்தால் இதுகுறித்து வெங்கடேசன் கங்கா வீட்டில் விசாரணை வீட்டில் கேட்டபோது. கங்காவின் தம்பியான பிரகாஷ் ஆகாத வார்த்தையால் வார்த்தையால் பேசி அடிக்கவும் முற்பட்டு உள்ளார்.
மேலும் கங்காவிற்கு மும்பையில் மாப்பிள்ளை பார்த்து வேறு ஒரு திருமணம் செய்து வைப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பலமுறை தங்காவை அழைத்தும் வராததால் மேலும் கங்காவின் குடும்பத்தினரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எஸ்பி அலுவலகத்தில் வந்த
வெங்கடேசன் குடும்பத்தினர் திடீரென தனது மூன்று குழந்தைகளுடன் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மண்ணெண்ணெய் கேனை பிடுங்கி அப்புறப்படுத்தினர்
இப்போது இதனை செய்து சேகரித்துக் கொண்டிருந்த நிருபர்களை பார்த்து எஸ் பி அலுவலகத்தில் எதற்காக நிருபர்கள் உள்ளே விட்டீர்கள் என பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான தடுப்பு பிரிவு காவல் துறை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் பேசிய சம்பவம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.