Skip to content

செல்போன் பறிப்பு- காதல் திருணம் செய்த பெண் தற்கொலை..திருச்சி க்ரைம்

பேட்டரி கடைக்காரரிடம் செல்போன் பறிப்பு

திருச்சி உறையூர் அண்ணாமலை நகர்தாமரை சாலை சித்தரிப்பு பகுதியை சேர்ந்த மணிமாறன் வயது 53 இவர் சிந்தாமணி அண்ணாசாலை பகுதியில் பேட்டரி கடை வைத்து நடத்தி வருகிறார் சம்பவத்தன்று கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்ற விட்டா.வீட்டில் இருந்தபோது மர்ம ஆசாரிகள் இரண்டு பேர் வீட்டிற்கு வந்து வீட்டிலிருந்து மணிமாறன் கதவை திறந்து வெளியே வந்த போது அவரிடம் வருமா சாமி ஒருவன் முகவரி கேட்பது போல் நடித்து அவர் சட்டை பாக்கெட்டில் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு மற்றொரு மரும ஆசாமியுடன் இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர் இந்த சம்பவங்களுக்கு மணிமாறன் ஒரே ஒரு போலீசில் புகார் கொடுத்தார் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்தப் பகுதியில் சந்தேகத்தை இடமானநபர் ஒருவர் பிடித்து விசாரணை செய்தபோது திருவரம்பூர் பர்மா காலனி சேர்ந்த ராஜ்குமார் என்பவர்நான் மணிமாறன் சட்டை பாக்கெட்டில் இருந்த செல்போனை தேடி சென்றது என தெரிய வந்தது இதை எடுத்து ஒரேயொரு போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜ்குமார் கைது செய்து உள்ளனர் மேலும் இந்த வழக்கில் தொடர்பு கொள்ள மற்றொரு ஆசாமியை வலை வீசி தேடி வருகின்றனர்

 

மயங்கி விழுந்து முதியவர் சாவு

திருச்சி ரெயில்வே ஜங்ஷன் பகுதியில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்தார் இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்ற முதியவர் திடீரென்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.இறந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற முழு விவரம் தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து கோ- அபிஷேகபுரம் கிராம நிர்வாக அலுவலர் கௌதம் பாபு கண்டோன்மென்ட் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்து போன முதியவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்

காதல் திருமணம் செய்து கொண்ட பெண் தற்கொலை 

 திருச்சி கருமண்டபம் பகுதியை சேர்ந்தவர் பிரகதீஷ் குமார் இவரது மனைவி கனிமொழி (வயது 20 )இருவரும் காதலித்து கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்த நிலையில் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு பிரதீஷ் குமாருக்கு விபத்து ஏற்பட்டு அதில் அவர் இறந்து விட்டார்.இந்த நிலையில் தனிமையில் இருந்த கனிமொழி மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு துணையாக அவரது தாய் காந்திமதி உடனிருந்தார். இந்த நிலையில் கடந்த 22ந்தேதி கனிமொழி தனது வீட்டில் சால்வையில் கூரை கம்பியில் தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயன்று உள்ளார் இதனை பார்த்த அவரது தாய் அவரை மீட்டு உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தார். பிறகு கனிமொழி மருத்துவமனையில் இருந்து விடு திரும்பினார். பிறகு மீண்டும் சில நாட்களில் சிகிச்சைக்காக பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்தார் .அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக கனிமொழி இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து கண்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!