மகாராஷ்டிராவில் குழந்தை பெற்ற 2 நாட்களிலேயே 12ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதியுள்ளார் நாந்தெட் பகுதியைச் சேர்ந்த சீத்தல் (21) என்ற பெண்! வறுமை காரணமாக பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தியுள்ளார். இந்த நிலையில், தற்போது திருமணம் ஆன நிலையிலும் கல்வியை மீண்டும் தொடர்ந்துள்ளார். குழந்தையை தூங்க வைக்க தேர்வு மையத்திலேயே தொட்டிலும் கட்டி கொடுத்துள்ளனர். இச்சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

