Skip to content

சாலையில் கிடந்த 5 சவரன் நகை- காவல்நிலையத்தில் ஒப்படைத்த தொழிலாளி

சிவகாசி நகர் பகுதியைச் சேர்ந்த ஹேமலதா என்பவர் சிவன் கோயிலில் நடந்த பிரதோஷ பூஜையில் கலந்து கொண்டு வீடு திரும்பியபோது தனது பர்ஸை தவறவிட்டுள்ளார். இந்நிலையில், விளாம்பட்டி பகுதியைச் சேர்ந்த பட்டாசு கூலித்தொழிலாளியான சின்ன கருப்பசாமி என்பவர் சாலையில் கிடந்த பர்ஸை எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.
பர்ஸில் இருந்த விவரங்களின் அடிப்படையில் உரியவரை தொடர்புகொண்டு காவல்துறையினர் பொருட்களை ஒப்படைத்த நிலையில், சின்ன கருப்பசாமியின் நேர்மையை பாராட்டி காவல் ஆய்வாளர் பொன்னாடை அணிவித்து பாராட்டினார்.

error: Content is protected !!