Skip to content

கரூரில் மல்யுத்த பயிற்சிக்கு மைதானம்…..அமைச்சர் உதயநிதிக்கு கோரிக்கை

கரூர் மாவட்டத்தில் மல்யுத்த பயிற்சி பெறும் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் உள்ளனர். ஜெகன்குமார் என்பவர் மல்யுத்த வீரர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார்.

கரூர் மாவட்டத்தில் மல்யுத்த பயிற்சி பெற்ற இளைஞர்கள் பலர் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு மாநில மற்றும் தேசிய அளவில் வெற்றி பெற்றுள்ளனர். பலர் சிறப்பிடம் பெற்று ஒதுக்கீடு அடிப்படையில் அரசு துறையில் பணியில் சேர்ந்துள்ளனர்.

மல்யுத்த பயிற்சி பெறுவதற்கு போதிய வசதிகள் இல்லாமல் மைதானம் இல்லாததால், இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க முடியாமல் உள்ளது. எனவே, கரூர் மாவட்டத்தில் மல்யுத்த பயிற்சி அளிக்க மைதானம் அமைத்து தரக்கோரி கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜெகன்குமார் மனு அளித்துள்ளார்.

மேலும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி கரூர் மாவட்டத்தில் மல்யுத்த மைதானம் அமைக்க உதவி புரிய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!