இளம்பெண் திடீர் மாயம்..
திருச்சி ஏர்போர்ட் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 42) கொத்தனார். இவருக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு செல்வி என்பவர் உடன் திருமணம் நடந்தது. இந்த தம்பதியருக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். சமீபகாலமாக அவரது மனைவி இன்ஸ்டாகிராம் மூலம் அடையாளம் தெரியாத வாலிபரிடம் ஒரு வருடமாக பேசி வந்தாக தெரிகிறது.இதை அறிந்த அவரது கணவன் முருகன் மனைவியை கண்டித்தார். இந்த நிலையில் கடந்த 22ந் தேதி திடீரென செல்வி வீட்டிலிருந்து மாயமானார். இதைபடுத்து முருகன் அவரை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தார். எங்கு தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து ஏர்போர்ட் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் நவநீதா கிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து மாயமான செல்வியை தேடி வருகிறார்.
வாலிபரிடம் ரூ. 7.5 லட்சம் மோசடி..
திருச்சி லால்குடி அருகே உள்ள டால்மியாபுரம் கோவண்டக்குறிச்சி ஆரோக்கியநாதபுரம் அன்னை நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் சேவியர். இவரது மகன் டேவிட் ராபின்சன் (41). இவரை ஸ்டாலின் ராஜ் என்பவர் அணுகி தான் ஆன்லைன் வர்த்தகம் செய்து வருவதாகவும், ரூபாய் 22 ஆயிரம் முதலீடு செய்தால் ஒரு வருடத்தில் ரூபாய் ஒரு லட்சமாக திருப்பி வழங்கப்படும் எனவும் ஆசை வார்த்தை கூறினார். இதை நம்பிய டேவிட் ராபின்சன் கடந்த 2022-ல் ரூபாய் ஏழு லட்சத்த்து 27 ஆயிரம் பணத்தை நேரடியாகவும் கூகுள் பே மூலமும் வழங்கியுள்ளார். ஆனால் ஸ்டாலின் ராஜ் கூறியபடி ஓராண்டு கழித்து, லாபமும் தரவில்லை. பின்னர் பலமுறை அவரை சந்தித்து கேட்டபோது காலம் கடத்தி வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 21 ந்தேதி ஸ்டாலின் ராஜி டேவிட் ராபின்சன் சந்தித்து தான் முதலீடு செய்த பணத்தை கொடுக்குமாறு கேட்டார். அப்போது இரண்டு பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் ஸ்டாலின்ராஜ் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதனால் பாதிக்கப்பட்ட டேவிட் ராபின்சன் திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சுலோச்சனா, ஸ்டாலின் ராஜு மீது மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
2 குழந்தைகளுடன் தாய் மாயம்
திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 44) இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் ஒரு மகள் ஒரு மகன் உள்ளனர். நேற்று கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த அவரது மனைவி தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வெளியே சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் கண்ணன் எடமலைப்பட்டி புதூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான பெண் மற்றும் அவரது இரண்டு குழந்தைகளை போலீசார் தேடி வருகின்றனர்.
புகையிலை பொருட்கள் வைத்திருந்த வாலிபர் கைது
கோட்டை சரக போலீசரகத்திற்குஉட்பட்ட இபி சாலையில் நேற்று கோட்டை போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர் அப்போது அங்கு சந்தேகிக்கும் வகையில் நின்ற வாலிபரை பிடித்து போலீஸ் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில்
அவர் வரகனேரி முகம் தியா தெருவை சேர்ந்த முகமது தாவூத் இப்ராஹிம் ( வயது 34) என்பதும், அவர் ரூபாய் 97 ஆயிரம் மதிப்புள்ள 51.5 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்திருந்தது தெரியவந்தது அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.