Skip to content

வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை

பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தைச் சேர்ந்த பட்டுல் (23) என்ற பெண்ணிற்கும், உத்தரபிரதேச மாநிலம் பர்சியா கிராமத்தைச் சேர்ந்த ரோகித் என்பவருக்கும் கடந்த ஆண்டு மே மாதம் 8-ம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு பட்டுல் தனது கணவர் வீட்டில் வசித்து வந்தார்.

இந்த நிலையில், பட்டுலிடம் அவரது கணவர் ரோகித், மாமியார் சந்திரவதி தேவி, நாத்தனார் ரூபி தேவி மற்றும் அவரது கணவர் ஆகியோர் சேர்ந்து கூடுதல் வரதட்சணை கேட்டுத் தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து கொடுத்த பாலியல் மற்றும் மன ரீதியான தொல்லைகளால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான பட்டுல், நேற்று இரவு தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பட்டுலின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், முதற்கட்டமாக பட்டுலின் மாமியார் சந்திரவதி தேவியைக் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அவரது கணவர் ரோகித் உட்பட மற்ற மூன்று பேரையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

error: Content is protected !!