செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பாலூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி, செங்கல்பட்டில் செயல்படும் அரசு உதவிபெறும் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வடக்குப்பட்டு கிராமத்தில் வசித்து வரும் 12ம் வகுப்பு பயிலும் சிறுவன் ஒருவன் மாத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் படித்து வருகிறான்.
இந்த இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நட்பாக பழகி வந்த நிலையில் இருவரும் காதல் வயப்பட்டுள்ளனர். இந்த காதல் ஜோடி அவ்வப்போது தனிமையில் சந்தித்ததுடன் எல்லை மீறியும் நடந்து கொண்டுள்ளனர். இதனிடையே, சிறுமியின் நடவடிக்கையில் எழுந்த மாற்றத்தால் சந்தேகமடைந்த அவரது பெற்றோர், அரசு ஆஸ்பத்திரிக்கு அவரை அழைத்துச் சென்று பரிசோதனை செய்தனர்.