Skip to content

132 நுண்ணறிவு பிரிவு காவலர்கள் பணியிட மாற்றம்… சென்னை கமிஷனர் அதிரடி…

சென்னையில் போதை பொருள் புழக்கத்திற்கு எதிராக காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக குட்கா, பான்மசாலா உள்ளிட்ட போதை பொருள் புழக்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக செயல்பட்டது, போதைப்பொருள் விற்பனை செய்யும் நபர்களுடன் ஆதரவாக செயல்பட்டது உள்ளிட்ட காரணங்களுக்காக சென்னை வடக்கு மற்றும் மேற்கு மண்டலத்தில் பணியாற்றி வந்த 15 ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் என 80க்கும் மேற்பட்ட காவலர்களை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து சென்னை காவல்துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக சென்னையில் வண்ணாரப்பேட்டை, தி.நகர், அண்ணாநகர், கீழ்ப்பாக்கம், அடையாறு உடப்ட 12 காவல் மாவட்டங்களில் உள்ள 132 காவல் நிலையங்களில் பணியாற்றி வந்த நுண்ணறிவு பிரிவு காவலர்களை பணியிட மாற்றம் செய்து காவல்துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த நுண்ணறிவு காவலர்களை அதே மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதுமட்டுமின்றி சென்னையில் உள்ள அனைத்து காவல் மாவட்டங்களில் சட்ட ஒழுங்கு காவலர்கள் மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களுடன் சேர்ந்து அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வசூல் வேட்டையில் ஈடுபட்டு வந்த நுண்ணறிவு காவலர்கள் பட்டியலை தயார் செய்து அவர்களை நுண்ணறிவு பிரிவில் இருந்து மாற்றம் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!