உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, திருச்சி மத்திய மண்டல அஞ்சல் துறை பொதுமக்களிடையே தூய்மை சக்தியைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், திருச்சி ராக்போர்ட் துணை அஞ்சல் அலுவலகம் முதல் திருச்சி தலைமை அஞ்சல் அலுவலகம் வரை மின்- மிதிவண்டி பேரணி நடத்தியது. இந்த மின்- மிதிவண்டி பேரணியின் முக்கிய சிறப்பம்சம் என்னவெனில், இதில் மின்- மிதிவண்டி பேரணியின் படங்களும் தூய்மையைப் பற்றிய செய்தியுடனும் கூடிய சிறப்பு அஞ்சல் உறை எடுத்துச் செல்லப்பட்டது. திருச்சி அஞ்சல் பிரிவைச் சேர்ந்த அஞ்சல் ஊழியர் மஞ்சுளா, இந்த சிறப்பு அஞ்சல் உறையை ராக்போர்ட் துணை அஞ்சல் அலுவலகத்திலிருந்து திருச்சி தலைமை அஞ்சல் அலுவலகம் வரை சுமார் 6 கி.மீ தொலைவுக்கு மின்-மிதிவண்டி மூலம் எடுத்துச் சென்றார்.
இந்த நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்,
ஏனெனில் தமிழக அஞ்சல் வட்டத்தில் மின் மிதிவண்டி மூலம் எடுத்துச் செல்லப்பட்ட சிறப்பு அஞ்சல் உறையை வெளியிடப்பட்டது இதுவே முதல் முறை ஆகும்.
இதைத் தொடர்ந்து, மத்திய மண்டல அஞ்சல்
தலைவர் டி.நிர்மலா தேவி சிறப்பு உறையை அஞ்சலக
மூத்த அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள்
முன்னிலையில் வெளியிட்டார்.
இதைத் தொடர்ந்து, மத்திய மண்டல அஞ்சல் தலைவர் டிநிர்மலா தேவி ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாக்கப்பட்ட வடுவூர் பறவைகள் சரணாலயத்திற்கான சிறப்பு அஞ்சல் உறையை அஞ்சலக மூத்த அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் வெளியிட்டார்.
இந்த இரண்டு சிறப்பு அஞ்சல் உறைகளும் திருச்சி தலைமை தபால் நிலையத்தில் உள்ள சிறப்பு தபால்தலை பணியகத்தில் விற்பனைக்குக் கிடைக்கும்.