Skip to content

திருச்சியில் கல்லூரி மாணவர்களிடம் வழிப்பறி- 2 பேருக்கு 7 ஆண்டு சிறை

திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் கீழரசூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆர். ராஜ்கரன் (19). இவர் நண்பர் மற்றும் உடன் படித்த தஞ்சாவூர் மாவட்டம் திருவிடை மருதுôர் மதகுசாலை கீழத்தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (18) இருவரும் திருச்சி எடமலைப்பட்டி புதுôர் அரசு காலனி 5 ஆவது குறுக்குத்தெரு பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கியிருந்து, திருச்சி}மதுரை சாலையிலுள்ள தனியார் கல்லுôரி ஒன்றில் சுகாதார ஆய்வாளர் பணிக்கான படிப்பு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு படித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 25.7.2021 அன்று இரவு தாங்கள் தங்கியிருக்கும் பகுதிக்கு அருகாமையில் இருக்கும் “ஓ’ பாலம் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த எடமலைப்பட்டி புதுôர் கொல்லாங்குளம் பாரதி நகர் பகுதியை சேர்ந்த எம். அபுதாகிர் என்கிற அப்புச்சி (33) மற்றும் அதே பகுதி நாயக்கர் தெருவை சேர்ந்த முகமது யாகூப் (42) ஆகியோர் ராஜ்கரன் மற்றும் ராஜேந்திரன் இருவரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, அவர்களிடம் இருந்து 2 கைப்பேசிகள், ரூ. 3700 ரொக்கம், ஏடிஎம் அட்டை, ஆதார் கார்டு, பான் கார்டு ஆகியவற்றை பறித்து சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த எடமலைப்பட்டி புதூர் போலீசார் அபுதாகிர் மற்றும் முகமது யாகூப் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுகுறித்த வழக்கு திருச்சி மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்த வந்தது. வழக்கின் வாத, பிரதி வாதங்கள் நிறைவுற்ற நிலையில், இந்த வழக்கில் வியாழக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், குற்றம் உறுதியானதையடுத்து, அபுதாகிர், யாகூப் இருவருக்கும் தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி மீனா சந்திரா உத்தரவிட்டார். அரசு தரப்பில் மூத்த அரசு சிறப்பு வழக்கறிஞர் ஹேமந்த் ஆஜரானார்.
error: Content is protected !!