கரூர் தனியார் திருமண மண்டபத்தில் இன்று இரவு திமுக கட்சியின் சார்பாக அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை, கரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட BLA 2 பூத் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கொங்கு மண்டல பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான வி.செந்தில் பாலாஜி வருகின்ற தேர்தல் களம் பற்றியும் திமுக வெற்றி பெற நிர்வாகிகள் எவ்வாறு களப்பணி ஆற்ற வேண்டும் என்பதை பற்றியும் விரிவாக எடுத்துக் கூறினார்.
அதைத் தொடர்ந்து வருகின்ற ஞாயிற்றுக்கிழமை கரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரப்பட்டியில் எனது பூத்தில் உள்ள பகுதிகளில் நான் அப்பகுதி மக்களிடையே கடந்த நான்கு ஆண்டுகளில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் செய்துள்ள சாதனை குறித்து பொதுமக்களை சந்திக்க இருப்பதாகவும் அதை தொடர்ந்து அனைத்து திமுக நிர்வாகிகளும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பூத்துகளில் உள்ள பொதுமக்களை நேரில் சந்தித்து தங்களது படிவத்தை பூர்த்தி செய்து வரும் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற அனைவரும் ஒன்று சேர்ந்து பாடுபட வேண்டும் என கூட்டத்தில் பேசினார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் சந்தித்த அவர் கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறுவது உறுதி தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு க ஸ்டாலின் அவர்களுக்கு கொங்கு மண்டலத்தில் இருந்து வரும் 2026 தேர்தலில் அதிக சட்டமன்றத் தொகுதிகளை பெற்றுத்தர அனைத்து நிர்வாகிகளும் ஒன்று சேர்ந்து பாடுபட வேண்டும் எனவும், இந்த தேர்தலில் வேட்பாளர் யார் என்பது முக்கியமல்ல உதயசூரியன் சின்னம் ஜெயிக்க வேண்டும் அதற்கு நாம் இன்றிலிருந்து தேர்தல் பணி ஆற்ற வேண்டும் என தெரிவித்தார்.

